முதுபெரும் இடதுசாரி தலைவர் சங்கரய்யா பிறந்த நாள்- சிபிஎம் நிர்வாகிகள் வாழ்த்து
சென்னை: தனது 98வது பிறந்த நாளை கொண்டாடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா நேற்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. தங்கவேல், எம்.என்.எஸ். வெங்கட்ராமன், எஸ். நூர்முகமது, ஏ. லாசர், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், அ. பாக்கியம், பா. ஜான்சிராணி, க. பீம்ராவ் மற்றும் தோழர் தே. லட்சுமணன் ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்தினர்.
முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா பிறந்தநாளையொட்டி, சென்னை, குரோம்பேட்டையில் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.