சே குவேரா, பிடல் காஸ்ட்ரோவை நேர்காணல் செய்தவர்.. மிக மூத்த பத்திரிக்கையாளர் கோபிநாத் மறைவு
சே குவேரா, பிடல் காஸ்ட்ரோவை நேர்காணல் செய்தவர்.. மிக மூத்த பத்திரிக்கையாளர் கோபிநாத் மறைவு
சென்னை: சே குவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ போன்றவர்களை நேர்காணல் செய்த, தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் இ.கோபிநாத், வயது முதிர்வால் இன்று மரணமடைந்தார்.
பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி அனுபவம் கொண்ட கோபிநாத், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின், தமிழக பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், இன்று மறைந்தார்.
காங்கிரசில் மாற்றம் வருகிறது.. செயல்படாத மூத்த தலைவர்களுக்கு டாட்டா... இளைஞர்களுக்கு வாய்ப்பு
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அவர் ஏஎன்ஐ செய்தி ஏஜென்சியில் பணியாற்றியவர். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் செய்திகளை சேகரித்த மூத்த பத்திரிக்கையாளரான கோபிநாத், புரட்சியாளர்கள் சே குவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரை கியூபா சென்று நேர்காணல் செய்த முதல் இந்திய பத்திரிக்கையாளர் என்ற பெருமையையும் பெற்றவர்.
கோபிநாத் மறைவுக்கு, ஏஎன்ஐ செய்தி நிறுவனம், அதன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.