முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்தார் பிரபல டிவி நடிகை
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து தமிழ் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்தார்.
கேரளத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது நடித்தார்.
அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சின்னத்திரைக்கு சென்றார். அங்கு முன்னணி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் வில்லியாகவும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே இவருக்கு சிறிய சிறிய சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி மாயாண்டி குடும்பத்தார், வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அமித் ஷாவிற்குத்தான் திறமை இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்!
இந்த நிலையில் இவர் பாஜகவில் இணைந்திருப்பதாக புகைப்படத்துடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இணைத்துக் கொண்டார்.
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இனைத்துக் கொண்டார். பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார். pic.twitter.com/92ZVAUFL0P
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 6, 2019
பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார் என பொன்னார் குறிப்பிட்டுள்ளார்.