உறவுக்கு நீதான் அழைத்தாய்.. மிரட்டி மிரட்டியே.. நாசம் செய்த இளைஞர்.. 10 வருஷம் சிறை!
இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Recommended Video
செங்கல்பட்டு: எதிர்வீட்டு பெண்ணை நாசம் செய்ததுடன், நீதான் உடலுறவுக்கு அழைத்தாய் என சொல்லிடுவேன் என்று மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் ஈஸ்வரன் கோயில்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். 26 வயசாகிறது. இவரது எதிர்வீட்டில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார்.
ஒருநாள், மாணவியின் பெற்றோரை பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயா அழைத்திருந்தார். அதனால் பெற்றோரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்திருக்கிறாள். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ஆல்பர்ட் வலுக்கட்டாயமாக சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் "நீதான் என்னை உடலுறவுக்கு அழைத்ததாக சொல்லி அசிங்கபடுத்தி விடுவேன்" என்று மிரட்டி மிரட்டியே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
பார்லிமென்டுக்கு போனோமா.. வந்தோமா என இல்லாமல் தருமபுரி எம்பி செய்த காரியத்தை பாருங்க மக்களே!
ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அழவும், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பரங்கிமலை மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் ஆல்பர்ட்டை கைது செய்தனர். ஆனால் ஆல்பர்ட், ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றி திரிந்தார்.
இந்த சம்பவம் கடந்த2016-ம் ஆண்டு நடந்தது. கடந்த 3 வருஷங்களாகவே இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குற்றவாளி ஆல்பர்ட்டை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி வேல்முருகன்.