சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையிலும் விழுந்த பொள்ளாச்சி பயங்கரத்தின் நிழல்.. பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்று சென்னையிலும் பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை!- வீடியோ

    சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே ஒரு பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் இங்குள்ள பெண்களுக்கு அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து மானாமதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில் அவர் கூறுகையில் விடுதி உரிமையாளர்களான தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தங்கள் நண்பர்களை விடுதிக்கு அழைத்து அங்கேயே மது அருந்துகின்றனர்.

    பொள்ளாச்சியில் மீண்டும் சோகம்.. கால்வாயிலில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி பொள்ளாச்சியில் மீண்டும் சோகம்.. கால்வாயிலில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி

    வீடியோ

    வீடியோ

    பின்னர் மது போதையில் அவர்கள் அனைவரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுபோதையில் உரிமையாளர்கள் தாமஸும் ஆறுமுகமும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து அந்த ஆதாரத்தை போலீஸிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து தாமஸ், ஆறுமுகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி அனுமதி

    மாணவி அனுமதி

    அதற்கு அந்த பெண் ஒத்துழைக்காததால் அவரை தாக்கியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். ஆதம்பாக்கத்தில் இது போல் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் குளியலறையில் கேமரா வைத்தாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

    4 பேர் கைது

    4 பேர் கைது

    அதுபோல் பொள்ளாச்சியில் பெண்களை காதல் வலையில் விழ வைத்து நண்பர்களோடு அந்த பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி வந்ததை அடுத்து புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த சூழலில் இது போன்று சென்னையிலும் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை துன்புறுத்தும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ஆதம்பாக்கம் சம்பவத்தை அடுத்து விடுதிகள் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    English summary
    Chennai Hostel Owners were being questioned by Police after getting Sexual harassment complaint against them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X