சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சில்மிஷம்.. 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீண்டிய 20 வயது இளைஞர்.. சென்னையில் சுற்றி வளைத்து கைது

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

சென்னை: சாலையில் எந்த பெண்ணை பார்த்தாலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தினேஷ்குமார் என்ற இளைஞரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.. 20 வயது இளைஞர்.. டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்... இதற்கான படிப்புகள் ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது.

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு, கைதுதலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு, கைது

எழும்பூரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலை செய்து கொண்டே, பயிற்சி பெற்று வருகிறார் இந்த இளைஞர்.. இதனிடையே வேலை முடிந்துவிட்டால், சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்வதுடன் அத்துமீறலிலும் ஈடுபடுவது இவரது வழக்கம்.

 பாலியல் சீண்டல்

பாலியல் சீண்டல்

இதற்காகவே தினமும் காலை 5 மணிக்கு, வில்லிவாக்கத்தில் இருந்து எழும்பூர் வரை பைக்கில் செல்வாராம். எதிரே எந்த பெண் வந்தாலும், அவர்களை சீண்டி, சேட்டையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.. தனியாக பெண் வந்தால், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த பெண்ணின் அருகில் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு, பிறகு வேகமாக பைக் எடுத்து கொண்டு பறந்து விடுவாராம்.

 வாக்கிங்

வாக்கிங்

இப்படித்தான் கடந்த 10-ந்தேதி அண்ணாநகர் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய 2 மகள்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவரது இளைய மகளுக்கு 22 வயதாகிறது.. அவர்களுக்கு முன்னால் அந்த பெண் நடந்து செல்லவும், தனியாக வந்திருப்பதாக நினைத்து, தினேஷ்குமார். அந்த பெண்ணை சீண்டி உள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சல் போடவும், பின்னால் வந்து கொண்டிருந்த அப்பா விரைந்து ஓடினார்..

 தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

அதற்குள் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் உதவியுடன் தினேஷ் குமாரை எழும்பூரில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. பிறகு அண்ணாநகர் மகளிர் போலீசில் செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை ஆரம்பமானது..

 சிறையிலடைப்பு

சிறையிலடைப்பு

அப்போது தினேஷ்குமார் தன்னுடைய வாக்குமூலத்தில், "எனக்கு சின்ன வயதில் இருந்தே இப்படி ஒரு எண்ணம் உள்ளது.. எந்த பெண் தனியாக நடந்து சென்றாலும், அவர்களை சீண்டி பார்க்கும் ஆசை வந்துவிடுகிறது.. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இப்படி தவறாக நடந்து கொண்டுள்ளேன்" என்று கூறினார்.. இறுதியில் தினேஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

English summary
Sexual Torture and 20 year old youth arrested in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X