சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குணிந்து அம்மி அரைக்கும் ஷிவானி.. திண்டாடும் ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் அம்மியில் அரைக்கும் டாஸ்க் நடைபெற்றது

Google Oneindia Tamil News

சென்னை: தொடை தெரியும் அளவுக்கு இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. குனிந்து.. அம்மி அரைக்கும் ஷிவானியின் அழகை ரசிகர்கள் 2 நாளாக கொண்டாடி வருகிறார்கள்.
சோஷியல் மீடியாவில் ஷிவானியைதான் அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.. அன்று அர்ச்சனா பேசியதற்காகவே அம்மியை டாஸ்கில் வைத்து விட்டார்கள் போல.

அம்மி வீட்டிற்குள் வந்து இறங்கியதுமே ஆளாளுக்கு அரைக்க தொடங்கினர். இதில், இத்துனூண்டு கவுன் போட்டுக்கிட்டு.. தொடை தெரியுமளவு குனிந்து உட்கார்ந்து ஷிவானி அம்மியும் அரைக்கும் அழகை பார்த்து அவரது ரசிகர்கள் கிறங்கியே போய்விட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா

 பிக்பாஸ்

பிக்பாஸ்

எத்தனை டாஸ்க் தந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்கையும் இந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் வெகு நேர்த்தியாக செய்து கொண்டு இருப்பதற்கு முதலில் ஒரு சபாஷ் போடலாம்.. இந்த முறை சீசன் எப்படி இருக்க போகிறதோ என்ற பிக்பாஸ் ரசிகர்களின் கவலையை, இந்த டீம் சரியாகவே செய்து கொண்டிருக்கிறது.

உணர்வுகள்

உணர்வுகள்

அந்த வகையில், திறமைகளுடன் உணர்வுகளுக்கும் நிறையவே பங்கு இருக்கிறது.. நீங்கா நினைவுகள் என்ற தலைப்பில், இந்த வீட்டுக்கு வந்ததும் ரொம்பவும் மிஸ் பண்றவங்க யார்... என்ன காரணம்?" இதுதான் அந்த டாஸ்க்.. இன்னும் 100 நாட்கள் முழுசாக முடியாதநிலையில், அதற்குள் யாரை மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டார் பிக்பாஸ்.

கண்ணீர்

கண்ணீர்

இதில் அதிகம் ஷாக் தந்தது ரம்யாதான்.. எப்பவுமே சிரித்த முகத்துடன் இருக்கும் ரம்யா நேற்றுதான் கண்ணீர் சிந்தினார்.. முதல்முறையாக ரம்யா முகத்தில் கண்ணீர் வரும்படியான ஒரு புரோமோவை போட்டுவிடவும், அவரது ஆர்மிகள் பதறியே போய்விட்டனர்.. நிகழ்ச்சி துவங்கும்வரை பதட்டத்துடன் காத்திருந்தனர்.. ரம்யா அழுவதை ஏற்கவே முடியவில்லை என்ற ரேஞ்சில் ஆறுதல் கமெண்ட்களை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

 சம்யுக்தா

சம்யுக்தா

வழக்கம்போல, அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா போன்ற தாய்க்குலங்கள் கண்கலங்கி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.. அனிதாவின் லவ் ஸ்டோரியும் நடுவில் ஓடியது.. இதில் அளவான வார்த்தை உதிர்த்தலுடன் பேசியது சுரேஷ்தான்.. எப்போது பேசினாலும், எதை பேசினாலும் தெளிவாக பேசுகிறார்.. இதில் ஃப்ரண்ட்ஸை மிஸ் செய்கிறேன் என்று சனம் பேசினார்.. ஆனால் இந்த டாஸ்கில் எல்லாருமே கண்கலங்கி பேசியபோது, சனம் மட்டு அழாமல் பேசியது ரொம்ப பெரிய விஷயம்.

 தாய்மை

தாய்மை

பொதுவாக, உணர்வுகளால் பின்னி பிணைந்தவர்கள் இந்தியர்கள்.. அந்த வகையில்,அனைவருமே காதல், அன்பு, தாய்மை, நட்பு, தியாகம், வீரம் போன்றவற்றுக்கு காலங்காலமாக கட்டுண்டு கிடப்பவர்கள்.. இதுபோன்ற உணர்வுகளை தட்டியெழுப்பிதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

English summary
Shivani gets more attention from Bigg Boss fans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X