வறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ!
சென்னை: சோழிங்கநல்லூர் சதுப்பு நிலம் முற்றிலும் வறண்டு விட்டதால் அவ்வழியாக வருவோர் போவோர் பார்த்து மனம் பதைபதைக்கின்றனர்.
சோழிங்கநல்லூரில் உள்ள சதுப்பு நிலம் என்பது கடலில் இருந்து உள்ளே வரும் உவர் நீரும் ஆறுகளில் இருந்து வரும் நன்னீரும் சங்கமிக்கும் இடம் ஆகும். இந்த சதுப்பு நிலத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூர் அருகே உள்ள எல்காட்டின் எதிர்புறமும், பின்புறமும் சதுப்பு நிலங்கள் அமைந்துள்ளன. எல்காட் பின்புறம் உள்ள ஓடை வழியே கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
Shozinganallur Wetland is now completely dry land. If you ever pass by this area stop and have a look, it is definitely a heart breaking scene now. Opposite to elcott #wefailed #TamilNadu #chennairains #ChennaiWaterScarcity #Chennai #தவிக்கும்தமிழ்நாடு pic.twitter.com/GIqWMguTJJ
— Janaak G (@JanaakVIRUS) June 14, 2019
இந்த நீர் சதுப்பு நிலங்களில் கலக்கின்றன. இதனால் சதுப்பு நில நீர் பாழாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
நா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு
இதனால் நீர் நிலைகள் ஆங்காங்கே வறண்டு வருகிறது. இது தண்ணீர் பஞ்சத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த நிலையில் சோழிங்கநல்லூர் சதுப்பு நிலம் முற்றிலும் வறண்டு விட்டது.
இதை அவ்வழியே போவோர் வருவோர் பார்த்து மனவேதனை அடைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஆக்கிரமிப்புகள்தான் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.