நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வைரமுத்து சொல்லும் சித்த மருத்துவ குறிப்பு
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தினமும் வெற்றிலை, வால்மிளகு, இஞ்சி சிறிதளவு சாப்பிட்டு சீரக தண்ணீர் குடிப்பதாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தினமும் வெற்றிலை, வால்மிளகு, இஞ்சி சிறிதளவு சாப்பிட்டு சீரக தண்ணீர் குடிப்பதாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சித்த மருத்துவ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பலரும் கபசுர குடிநீர் குடித்து வருகின்றனர். தினசரி முட்டை, அசைவ உணவுகளையும் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சித்த மருத்துவ குறிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் " வெற்றிலை ஒன்று, வால்மிளகு இரண்டு, நகத்தளவு இஞ்சித் துண்டு, மூன்றையும் மென்று அதிகாலையில் சீரகத் தண்ணீர் அருந்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் வழிகளுள் இதுவும் ஒன்று என்று நம்புகிறேன். அருள் கூர்ந்து நீங்களும்... என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.