உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம்: ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கும் சின்மயி
Recommended Video
சென்னை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பாடகி சின்மயி காவல் ஆணையர் அனுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வழக்கறிஞர்களும், பெண் உரிமை ஆர்வலர்களும் நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அனுவலகத்தில் பாடகி சின்மயி மனு அளித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் முறையான விசாரணை நடத்த கோரி ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.