முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்.. வசீகர குரலுக்கு சொந்தக்காரர் எஸ்பிபி பிறந்தநாள் இன்று!
சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பிறந்தநாளையொட்டி அவருக்கு டிவிட்டரில் நெட்டிசன்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம். 1966 ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திரை வாழ்க்கை இன்று வரை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம். கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு பின்னணியில் ஒலிக்கும் இவரது பாடல்கள் அப்படியே நடிகர்கள் பாடுவதை போன்றே இருக்கும்.
நெட்டிசன்கள் வாழ்த்து
தனது வசீகர குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் எஸ்பி பாலசுப்பிரமணியம் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இன்று 73வது பிறந்த நாளைக்கொண்டாடும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
கின்னஸ் நாயகர்
என் செவிநாளங்களில் ஆக்கிரமித்திருக்கும் என் அபிமானக்குறிய "பாட்டுத்தலைவன்"
"கின்னஸ்" நாயகர்
"பாடகர்களின் பேரரசர்"
திரு.S.P.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு! எமது இதயமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துகள்
|
பாலு சாருக்கு பிறந்தநாள்
எங்களின் பாடும் நிலா பாலு சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
|
ஆத்மாவின் ஆழமான உணர்வு
இந்திய சினிமாவின் பசுமையான குரலுக்கு பிறந்தநாள், சூப்பர்ஸ்டார்ஸ் உடன் ஒத்திருக்கிறது. ஆத்மாவின் ஆழமான உணர்வைத் தொடுபவர்
|
பாடு நிலா பாலு
பாடுநிலா பாலு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
|
இந்திய இசையின் காந்த குரல்
இந்திய இசையின் காந்த குரலுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகள்.. எஸ்பிபி இன்றி பிளேலிஸ்ட்டில் பாடல்கள் இருக்காது.. 4 தசாப்தங்களுக்கும் மேலாக நம்மை மயக்கிய ஒரு பிரபல பாடகர்..
|
எப்போதும் வயதாவதில்லை
குரலுக்கு எப்போதும் வயதாவதில்லை.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...