சிவக்குமார் 2.0 படத்தில் வரும் பக்ஷிராஜனின் பெரிய ஃபேனாக இருப்பார் போல.. நெட்டிசன்கள் கலகல!
Recommended Video
சென்னை: சென்னையில் எழுத்தாளர் ஒருவரது வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த சிவக்குமார் செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டி விட்டதை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எழுத்தாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளே வந்தார் சிவக்குமார். அப்போது நீல சட்டை அணிந்திருந்த ஒருவர் சிவக்குமாரின் முகத்துக்கு நேராக செல்போனை நீட்டி செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது கோபமடைந்த சிவக்குமார் போனை கேஸுவலாக தட்டிவிட்டார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
|
புது செல்போன்
பயப்புள்ள புது செல்போனுக்கு அடி போடறான்.
|
ஒரு போன் பார்சல்
சாருக்கு ஒரு புது போன் பார்சல்
|
செல்போன்
செல்போன் டிஸார்டர்
|
ஆர்வம்
மக்களால்தான் நீங்கள் நடிகராகியுள்ளீர்கள். எங்களை காயப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் ஒரு நடிகர், உங்களை பொது இடங்களில் வைத்து பார்ப்பது அரிது. அதனால் மக்களும் உங்களுடன் செல்பி எடுக்க ஆசைப்படுகிறார்கள். இனியாவது பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
|
மிகப் பெரிய ஃபேன்
நான் நினைக்கிறேன்.. சிவக்குமார் 2.0 படத்தில் வரும் பக்ஷிராஜனின் மிகப் பெரிய ஃபேனாக இருப்பார் போல.
|
ஆபத்து
செல்போனை என் முன்னால் கொண்டு வராதீர். அவை உங்கள் போன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.