கூடுதல் நீதிபதிகள் 6 பேர்.. சென்னை உயர்நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 6 நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கோரிய மத்திய சட்ட அமைச்சக பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய,நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி,ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
Comments
English summary
six additional judges appointed as permanent judge in madras high court after President approves Law Ministry recommendation