வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் அரசு அலுவலங்கள் இயங்கவில்லை. மேலும் குறைந்த ஊழியர்களுடனே பல மாவட்டங்களில் அரசு அலுவலங்கள் இயங்கி வருகிறது.
இதனால் அரசு அலுவலங்களில் கோப்புகளுக்கான பணிகள் நிறைய நிலுவையில் உள்ளது. இதையடுத்து வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா?
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட உத்தரவின்படி, கோப்புகள் மீது நடவடிக்கை எடுகக வேண்டியுள்ளதால், ஆறு நாட்களும் வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலங்களுக்குள் வர வேண்டும். அரசு பணியாளர்கள் தினமும் வருவதை அறிக்கை தயார் செய்து பணியாளர் சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.