ஏமாற்றிய ஃபானி.. கைகொடுக்கும் வெப்பசலனம்.. தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயலால் தமிழகத்தில் மழை பெய்யும் தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபனி புயல் திசை மாறி ஒடிசாவுக்கு சென்றுவிட்டது.
ஒடிசா அருகெ நிலைகொண்டுள்ள அந்த புயல் நாளை பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை வாய்பு நழுவி போனது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.
ஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.