சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Chennai Rains: நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச... வா மழையே... சென்னை மக்கள் ஏக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்| கடும் வெயிலால் முதியவர் மயங்கி உயிரிழப்பு-வீடியோ

    சென்னை: இந்தா இருக்கு பக்கத்து ஊரு, மழை அப்படி அடிக்குது தலைநகர் சென்னையில், காற்று தான் வருது, மழையைக் காணோம் என்பது தான் சென்னைவாசிகளின் பலரின் புலம்பலாக உள்ளது.

    மழை இல்லாததால், வெயிலின் தாக்கம் பெரும்பாலான மக்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறது. அதே நேரம், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது. மினரல் வாட்டர் கேன்களின் விற்பனையும் சூடுபறக்கிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

    சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர் சென்னையில் மழை உண்டு.. 18-ஆம் தேதிக்கு பிறகு வங்கக் கடலில் மீண்டும் புயல்- தனியார் வானிலை ஆய்வாளர்

    தண்ணீர்.. தண்ணீர்

    தண்ணீர்.. தண்ணீர்

    தண்ணீர் தட்டுப்பாட்டால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். பலர், வீடுகளை காலி செய்து விட்டு ஓரளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடிய, ஏரியாக்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் பல அடிக்கு கீழ் சென்றுவிட்டன. அவ்வாறு கிடைக்கும் தண்ணீரும் கடலில் இருந்து நேரடி இணைப்பு போல் உள்ளது. தண்ணீரைத் தேடி அலையும் நிலை வெகுநாட்களில் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், தண்ணீர்... தண்ணீர் என இயற்கை புலம்ப வைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

    திருவள்ளூரில் மழை

    திருவள்ளூரில் மழை

    இதற்கிடையே, திருவள்ளூர் அருகே மணவாள நகர், ஒண்டிகுப்பம், புட்லூர் சுற்றுவட்டாரங்களில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், சென்னை திருப்பதி செல்லும் சாலையில் குறுக்கே மின் கம்பம் விழுந்ததால் மாற்றுப்பாதையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றன.

    உள்மாவட்டங்களில் மழை

    உள்மாவட்டங்களில் மழை

    செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் மரக் கிளைகள் ஒடிந்து தொங்கியதால் அவ்வழியாக செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதே போல், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

    சென்னை மக்கள் ஏக்கம்

    சென்னை மக்கள் ஏக்கம்

    இதற்கிடையே, தமிழகத்தில் அனல் காற்று சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை வரவேண்டும், மக்கள் மனம் குளிர வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் ஏக்கமாக உள்ளது.

    English summary
    The lack of rain, increases Sunny in Chennai, People's Nostalgia
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X