சின்னஞ்சிறிய வயதில் எத்தனை நேர்த்தி.. வேத மந்திரங்களை முழங்கி பூஜை செய்யும் பிஞ்சு.. வைரல் வீடியோ
சென்னை: கோயிலில் ஒரு குட்டிச் சிறுவன் பூஜை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சின்னஞ்சிறிய வயதில் எத்தனை மெனகெடல் என பாராட்டுகள் குவிகின்றன.
7 வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அக்குழந்தை வாய் திறந்து சிறிய வார்த்தை பேசினாலும் அனைவர் காதிலும் தேன் சொட்டுவது போல் இருக்கும்.
ஆனால் அதே சிறிய குழந்தை வேத மந்திரங்களை முழங்கினால் எப்படி இருக்கும். ஆஹா அற்புதம். அது போன்ற அற்புதம் ஒரு கோயிலில் நடந்துள்ளது. அது எந்த கோயில் என்பது தெரியவில்லை.
துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு
தெய்வங்கள்
எனினும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் ஒரு வீடியோவில் மந்திரங்கள் கூறி, மணி அடித்தவாறு சூடம் ஏற்றுகிறான். பின்னர் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் காண்பிக்கிறான்.
வீடியோ
இதைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதமாக வழங்குகிறான். இந்த சிறுவனின் வீடியோவை பார்த்தால் பெரியவர்கள் கூட தோற்றுவிடுவார்கள். அத்தனை நேர்த்தி!
ஷேர்
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போர் சிறுவனுக்கு லைக்ஸ் கொடுப்பதோடு தாங்கள் சார்ந்த குரூப்களுக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.
|
விவரங்கள்
பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்னும் சிலர் இந்த கோயில் எங்குள்ளது, சிறுவனின் பெயர் என்ன என்பது போன்ற கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த வீடியோவை ஷேர் செய்தவருக்கே இந்த விவரங்கள் தெரியவில்லையாம்.