சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் முடியும் நேரத்தில் சென்னை எம்கேபி நகர் விவேகனாந்தா பள்ளியில் ஏராளமான மக்கள் வாக்களிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை எம்கேபி நகர் விவேகானந்தா பள்ளியில், வடசென்னை மக்களவை, பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வியாசர்பாடி பகுதியில் இருக்கும் ஜேஜே நகர், சத்யமூர்த்தி நகர் மக்கள் இந்த விவேகானந்தா பள்ளியில் தான் வாக்களித்து வருகிறார்கள்.

so many people entered chennai mkb nagar poll booth for noth chennai lok sabha polls

காலை முதலே வாக்குப்பதிவு இங்கு மந்தமாக இருந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டுவந்து வாக்களிக்க குவிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். வாக்குச்சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு 'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு

ஒரே நேரத்தில் கூடிய மக்களை கட்டுப்படுத்தி, நிற்க வைக்கும் பணியினை மேற்கொள்ள போதிய காவலர்கள் இல்லாமல் திணறினர். இதனிடையே தேர்தல் அலுவலர்கள் மக்களிடம் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அமைதியாக வரிசையில் நிற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

வந்திருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஆனாலும் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் இருந்து எட்டிப்பார்க்காமல் இருந்த மக்கள் திடீரென கடைசி நேரத்தில் மொத்தமாக வாக்களிக்க குவிந்ததால் எம்கேபி நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
so many people entered chennai mkb nagar poll booth for noth chennai lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X