தமிழன் பிரசன்னாவின் நக்கல் டிவீட்.. திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended Video
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழன் பிரசன்னா போட்ட நக்கல் டிவீட்டால் திமுகவுக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சே திடீர் பிரதமராகியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கேவை டிஸ்மிஸ் செய்து விட்டு அவரது இடத்தில் ராஜபக்சேவைக் கொண்டு வந்துள்ளார் சிறிசேனா. அவரது செயலால் உலகத் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சீரியஸான வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளன. ஆனால் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கல் நையாண்டியாக ஒரு டிவீட் போட்டு வாங்கிக் கட்டி வருகிறார்.
அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... pic.twitter.com/qKN5fr4G3C
— தமிழன்பிரசன்னா (@PrasannaTamilan) October 26, 2018
ராஜபக்சே பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை இழுத்துள்ளார். அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என்று தனது டிவீட்டில் போட்டுள்ளார் தமிழன் பிரசன்னா. இதனால் பலரும் கொந்தளித்து தமிழன் பிரசன்னாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவையும் இதில் இழுத்து கடுமையாக சாடி வருகின்றனர்.
தமிழன் பிரசன்னா போட்ட டிவீட்டால் தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடி பதிவிட்டு வருகின்றனர். அவர் தவிர மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரையும் கடுமையாக விமர்சிக்கும் பதிவுகளும் குவிந்து வருகின்றன.
[இலங்கையில் யார் யாருக்கு எத்தனை எம்.பிக்கள்.. இதோ லிஸ்ட்!]
சீரியஸான விஷயத்தில் ஏன் இப்படி நக்கல் நையாண்டியான கருத்தைப் பதிவிட்டார் தமிழன் பிரசன்னா என்பது தெரியவில்லை. ராஜபக்சே பதவிக்கு வந்தது என்னவோ, சீமானுக்குச் சம்பந்தமானது என்பது போல அவர் கேலி செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பதிவுக்கு வரும் எதிர் வினைகள் பலவற்றைப் படிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வசவுகள் பலமாக இருக்கிறது.
{document1}