தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது!
Recommended Video
சென்னை: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை.
விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு நீலகிரியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.
ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூரிய கிரகணம் தெளிவாக தெரியவில்லை.
மேலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. கேரளாவின் கொச்சியிலும் ஒடிஷாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.
Odisha: Solar eclipse begins; latest visuals from Bhubaneswar. pic.twitter.com/iWtol26BlA
— ANI (@ANI) December 26, 2019
ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.
Gujarat: Solar eclipse witnessed in Ahmedabad. pic.twitter.com/EpUqIDWOpD
— ANI (@ANI) December 26, 2019
சென்னையில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது
Tamil Nadu: Solar eclipse witnessed in Chennai pic.twitter.com/7cDz6NSgmc
— ANI (@ANI) December 26, 2019
திண்டுக்கல் மாவட்டதில் சூரிய கிரகணமும் வானம் ஒரு பக்கம் இருண்டும் காணப்படுகிறது
கோவையில் சூரிய கிரகண காட்சிகள்: