டார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா..? கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு!
சென்னை: டார்லிங் என ரம்யா பாண்டியனிடம் சோம் சேகர் வழிவதை பார்த்தால் ஏற்கெனவே பாலா- சிவானி இடையே ஓடும் காதல் போல் இவர்கள் இருவரும் தனி டிராக்கில் போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாட்டி சொல்லை தட்டாதே எனும் டாஸ்க் ஹவுஸ்மேட்டுகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த டாஸ்கில் சோம் சேகரும் ரம்யா பாண்டியன் கணவன் மனைவி போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ரம்யா என அழைத்த சோம் சேகர் , இனி டார்லிங்தான் என அழைக்கத் தொடங்கிவிட்டார்.
கிறங்க வைக்கும் ஷிவானி.. மிரள வைக்கும் ரம்யா.. ஆனாலும்.. புலம்ப தொடங்கும் ரசிகர்கள்
பேசுவது
ஏற்கெனவே இருவருக்குள்ளும் ஒரு மென்மையான அன்பு நீடித்து வருகிறது. ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேட்டை கூட சோம் சேகர் சாப்பிட மனமில்லாமல் அப்படியே பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அது போல் இருவரும் எப்போதுமே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பர்.
கலாய்த்த போட்டியாளர்கள்
பேசும்போதும் வெட்கப்பட்டு கொண்டே பேசுவர். ஏற்கெனவே இந்த வீட்டில் பாலாவுக்கும் சிவானிக்கும் இடையே காதல் டிராக் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அது போல் சோம்- ரம்யா இடையே தனி டிராக் இருக்குமோ என்ற சந்தேகம் பிக்பாஸ் நேயர்களுக்கு உள்ளது. போட்டியாளர்களும் சாக்லேட்டை வைத்து சோமை கலாய்த்து வருகிறார்கள்.
கவிழும் காதல்
பிக்பாஸ் வீடு என்றால் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் முளைக்கிறது. ஆனால் துளிர்த்து வெளிவரும் முன்னரே கருகி விடுகிறது. முதல் சீசனில் ஓவியா- ஆரவ் இடையே ஒரு டிராக் ஓடியது. அது போல் முகென்- அபிராமி, கவின்- லாஸ்லியா- ஷாக்ஷி (முக்கோண காதல்), ஐஸ்வர்யா தத்தா- ஷாரீக் ஹுசைன், மஹத்- யாஷிகா இடையே காதல் டிராக் இருந்ததாக சொல்லப்பட்டது.
கடலை
ஆனால் பிக்பாஸ் சீசன் 3 வரை இருந்த இந்த 5 காதல் ஜோடிகளுமே வெளியே வந்த பிறகு தங்களது காதலை தொடரவில்லை. அது போல் பிக்பாஸ் 4 சீசனிலும் முளைத்துள்ள இந்த இரு காதல் ஜோடிகளும் வெளியே வந்த பின்னரும் தொடர்வார்களா அல்லது வழக்கம் போல் கடலையா என்பது தெரியவில்லை.