சூரியன் மறைவதில்லை புத்தகத்தை வெளியிட்ட சோனியா.. வீரவாள் ஏந்திய சோனியா, ராகுல், ஸ்டாலின்
சென்னை: சூரியன் மறைவதில்லை என்ற புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார்.
கருணாநிதி, அண்ணா சிலை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தியால் திறக்கப்பட்டது. இதையடுத்து சோனியா, ராகுல் ஆகியோர் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதலில் சூரியன் மறைவதில்லை என்ற புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார்.
பின்னர் சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோருக்கு வீர வாள் பரிசாக அளிக்கப்பட்டது.
English summary
Sonia Gandhi releases the book of Suriyan Maraivathillai in YMCA ground.