தலைவர்கள், திரையுலகினர் புடை சூழ.. கோலாகலமாக நடந்த கருணாநிதி சிலை திறப்பு
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அண்ணாவின் சிலைக்கு அருகே கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையைத்தான் இன்று மாலை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
தலைவர்கள்
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே பல மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் வந்திருந்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிலையைத் திறந்து வைத்தார்.
ராகுல், சோனியா
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே விமானத்தில் சென்னை வந்தனர். சென்னை வந்த சோனியா காந்தி , ராகுல் காந்திக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக சார்பில் இருவரையும் எம்.பி கனிமொழி வரவேற்றார். காங். மூத்த தலைவர்கள் ப.சிதம்பம், நாராயணசாமி, தங்கபாலு உள்ளிட்டோரும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
சிலை திறப்பு
இருவரையும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து அருகே இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு சோனியா, ராகுல் செல்கிறார்கள். ஓய்வுக்குப் பின்னர் அறிவாலயம் சென்று கருணாநிதி சிலையைத் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
ரஜினிகாந்த், வடிவேலு
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, நாசர், பிரபு, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் விழா பங்கேற்றனர். அதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும் ,கலந்து கொண்டனர். திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பல்துறையினர் குவிந்ததால் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.