பாவம் விஜயகாந்த்.. எல்லாம் போச்சு.. கூட்டணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்தில் தேமுதிக!
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை அதிமுக கழட்டிவிட உள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: "கோபத்துடன் எழுபவன், நஷ்டத்துடன் உட்காருவான்" என்று ஒரு பழமொழி இருக்கே.. அப்படி ஆகிவிட்டது தேமுதிக நிலைமை. இக்கட்சி காட்டிய கோபம், பிடிவாதம், கெத்து.. இதெல்லாம்தான் அதிமுக கூட்டணியில் இனியும் இடம் பெற முடியாத அளவுக்கு வந்துவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
2015 லோக்சபா தேர்தலில் பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது தேமுதிக. இத்தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்விதான். வாக்கு சதவீதமும் 5.1 சதவீதமாக இறங்கிப் போனது.
அதேபோல, 2016ல் திமுக தலைவர் கருணாநிதி, விஜயகாந்த்தை கூட்டணிக்குள் கொண்டு வர கடுமையாக முயன்று பார்த்தார். ஆனால் மக்கள் நலக் கூட்டணி என்ற வலைக்குள் போய் சிக்கிக் கொண்டு, வாக்கு வங்கி மேலும் சரிந்து 2.39 ஆக இறங்கிப் போய் விட்டது.
பஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. குமரியில் பரபரப்பு
படுமோசம்
இந்த முறை இன்னும் படுமோசமாகி விட்டது நிலைமை. பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சேருவதற்கு முன்பு செய்த பிடிவாதங்கள், பந்தா, பேரம் உள்ளிட்டவை மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டன. மக்கள் தேமுதிகவை தூக்கி போட்டு விட்டனர். வெறும் 2.19 சதவீத வாக்குகளுடன் படு மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக.
அபாயம்
பதிவான வாக்குகளில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும். அதனால் மாநிலக் கட்சி அங்கீகாரம் பறி போகும் அபாயம் கூட ஏற்பட்டதாக பேச்சு எழுந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம், பிரேமலதா, சுதீஷ் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என தேமுதிகவினரே வருத்தப்பட்டு சொன்னார்கள்.
அப்செட்
இதுபோன்ற காரணங்களாலும், கூட்டணிக்கு தேமுதிகவால் எந்தவித பலனும், வாக்கு வங்கியும் இல்லாததாலும் உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சியை அதிமுக கழட்டி விட உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவின் சப்போர்ட் ஒன்று காரணமாகத்தான் ஏற்கனவே சீட் தரப்பட்டது. ஆனால் இப்போது பாஜகவும் தேமுதிக மீது அப்செட்தானாம்.
பேசுவதே இல்லை
தோல்வி அடைந்தாலும், விறுவிறுவென மக்களுடன் இந்த கட்சி கலந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இறங்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. எதுக்காகவும் ரோட்டிற்கு வந்து பேசுவதே கிடையாது.. பிறகு எப்படி மக்களின் அங்கீகாரம் இக்கட்சிக்கு கிடைக்கும் என்பது பொதுவான கேள்வி?
சீனியர்கள்
எனவே உள்ளாட்சி தேர்தல் மட்டுமில்லை.. சட்டமன்ற தேர்தலில் கூட தேமுதிகவை அதிமுக ஒதுக்கவே செய்யும் என்கிறார்கள். சட்டமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி இக்கட்சிக்கென்று ஒரு உறுப்பினர்கூட இல்லை. அவ்வளவு ஏன்.. கட்சியிலேயே முக்கிய நிர்வாகிகள், பெயர் குறிப்பிடும்படியான சீனியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.
பாவம்
இதையெல்லாம், அதிமுக நிர்வாகிகள் நன்றாக யோசித்துதான் தேமுதிகவை கழட்டிவிடப்படும் நிலைமைக்கு வந்துள்ளார்களாம். இப்போது கூட்டணி கட்சி என்ற ஒரு பேச்சு உள்ளது.. அதிமுக கழட்டிவிட்டால்.. தேமுதிக என்ற ஒரு கட்சியின் எதிர்காலம்? எவ்வளவோ அரும்பாடுபட்டு விஜயகாந்த் கட்சியை உருவாக்கி வளர்த்துக் கொண்டு வந்தார்.. ஆனால் "பாவம் விஜயகாந்த்" என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை!