எல்லாம் ரெடி.. நாங்குநேரிக்கு வர்றோம்.. களம் இறங்கும் தினகரன்.. சைலன்ட்டாக பார்க்கும் அதிமுக
நாங்குநேரி தேர்தலை அமமுக சந்திக்கும் என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: யாரை பார்த்து.. லெட்டர் பேடு கட்சின்னு சொல்றீங்க என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஏற்கனவே சவால் விட்டவர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன். அதனால்தானோ என்னவோ, அடுத்தக்கட்ட தேர்தலுக்கு அமமுகவை தயார்படுத்திவிட்டார் டிடிவி தினகரன்.
சில தினங்களுக்கு முன்பு, அதாவது வேலூர் தேர்தலுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "அமமுக தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் வேலையில் தீவிரமாக உள்ளோம். இதனால்தான் எம்பி தொகுதியில் கூட போட்டியிடவில்லை.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்ட மன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிட மாட்டோம். ஏன் என்றால், இப்போது நாங்கள் போட்டியிட்டால், 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்த பிறகு ஒரே சின்னத்தை தேர்தல் கமிஷன் வழங்கும்போது தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்" என்றார்.
திமுக அடித்த பல்டி.. 370 நீக்கியது தவறு என்று நாங்கள் போராடவில்லை.. குவியும் விமர்சனங்கள்!
உள்ளாட்சி தேர்தல்
இதைதவிர, கண்டிப்பாக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இப்ப சேதி என்னவென்றால், கட்சியை பதிவு செய்யும் முயற்சி நிறைவடைந்து விட்டதாம். அதனால் நாங்குநேரி தேர்தலுக்கு ரெடியாக தினகரன் தரப்பு ரெடியாகி விட்டதாக தெரிகிறது. பொது சின்னம் கிடைத்தால், நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளாராம்.
அதிமுக
ஏற்கனவே வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாததால், அக்கட்சியின் வாக்குகளை அப்படியே மொத்தமாக அதிமுகவே அள்ளிக் கொண்டது. இது போக அமமுக தரப்பின் முக்கிய நிர்வாகிகள் தாய் கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.
மறுப்பு
இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தலை சந்திக்க தினகரன் தயார் ஆகி வருகிறார். இதனால் அமமுக புத்துயிர் பெற்று வரும் என்று நம்பப்படுகிறது. இருந்தாலும், தினகரனை ஜெயிலில் சசிகலா சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பியதாக செய்திகள் வந்ததுதான் நமக்கு இடிக்கிறது.
சசிகலா
கட்சியை பலப்படுத்த தினகரன் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், அமமுக மீதான சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்பது நமக்கு வெளிப்படையாக தெரியவில்லை. ஆக மொத்தம்.. நாங்குநேரி தொகுதிக்கு அமமுக ஜரூராக ரெடியாகி வருவது மட்டும் தெளிவாகி வருகிறது.
எல்லாஞ்சரி.. எத்தனை ஓட்டு விழும்னு தெரியலையே