அந்த ரூமில் அமித்ஷாவை சந்தித்த அந்த 2 முக்கிய புள்ளிகள்.. யாரும் எதிர்பாரா சந்திப்பு..!
சென்னையில் அமித்ஷாவை 2 முக்கிய புள்ளிகள் சந்தித்து பேசினார்களாம்
சென்னை: அமித்ஷா சென்னை வந்திருந்த போது 2 விஐபிக்கள் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. இந்த விஷயமே இப்போதுதான் கசிந்து வருகிறது!
அமித்ஷா ஒருநாள்தான் வந்துபோனார்.. ஆனால், இன்னமும் அவரது சென்னை வருகையின் தாக்கம் குறையவில்லை.. அன்று அவர் டெல்லியில் இருந்து கிளம்புவதற்கு முன்னால் ஏற்பட்ட பரபரப்பு, அவர் மறுபடியும் டெல்லிக்கு போய் சேர்ந்தும் அடங்கவில்லை.
இதற்கு காரணம், அமித்ஷாவுடன் யார் யார் என்ன பேசினார்கள் என்று தெரியாததுதான்.. ரஜினியை சந்திக்க போகிறார், அதற்கான ரகசிய இடம் தயார் என்றார்கள்.. ஒன்றையும் காணோம்.. அதுபோலவே, முக அழகிரி சந்திக்க போகிறார், மதுரையில் இருந்து காரில் கிளம்பி ஆன் தி வே-யில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.. அதை பற்றியும் காணோம்! இப்படி புதிராகவும், புரளியாகவும் அமைந்தது அமித்ஷாவின் வருகை!
ஆனால், அமித்ஷா யாரை சந்திக்க போகிறார் என்று சொன்னார்களோ, அவர்களை தவிர 2 பேர் சந்தித்து பேசியுள்ளனர்.. ஒருவர் விபி துரைசாமி.. இவர் திமுகவில் இருந்து புதிதாக தாமரையில் மலர்ந்தவர்.. தற்போது பாஜகவின் புதிய துணை தலைவரும்கூட!
அமித்ஷாவை நேரில் சந்தித்த இவர்,"நீங்க தான் இரண்டாம் இரும்பு மனிதர்" என்று சொன்னாராம்.. அப்படி சொல்லி ஒரு புத்தகத்தையும் அவருக்கு பரிசாக தந்திருக்கிறார்.. அந்த புத்தகம் பெயர் 'தி மேன் ஹூ சேவ்டு இந்தியா" என்பதாகும்,.. அதை எழுதியவர் பிரபல எழுத்தாளர் சென்குப்தா.. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், சமஸ்தானங்களை சர்தார் வல்லபபாய் படேல் இணைத்து, நாட்டை வலிமைப்படுத்திய வரலாறு பற்றியதாம் அந்த புத்தகம்!
அதேபோல இன்னொருவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.. அவர்தான் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி.. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் "ஜல் ஜீவன் மிஷன்" திட்டத்தை, தமிழக ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தியதாக வேலுமணியை அமித்ஷா வெகுவாக பாராட்டினாராம். அமித்ஷா சென்று இத்தனை நாள் கழித்துதான் இந்த தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.