மாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்!
ரசிகர்களை பார்த்து கையசைத்தார் ரஜினிகாந்த்
சென்னை: மாஸ்க்கை கழட்டிவிட்டு, இடுப்பில் கை வைத்து கொண்டு, ரசிகர்களை பெருமிதம் பொங்க ரஜினி பார்த்த வீடியோவை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.. இதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு இன்று காலை வந்திருந்தார்.
நேற்றே ரஜினி இங்கு வருவார் என்ற செய்தி பரபரத்து காணப்பட்டதால், அவரது திரளான ரசிகர்கள் விடிகாலை முதலே மண்டபம் எதிரே குழுமி விட்டனர்.. அவர்களை பார்த்து இன்று ரஜினி கையசைத்தார்.
வழக்கமாக இவ்வளவு காலம் மண்டபத்தில் ஆலோசனை மட்டுமே நடத்திவிட்டு சென்ற நிலையில், கடந்த முறை அரசியல் பிரவேசம் உறுதி என்ற செய்தியை அறிவித்த கையோடு, ராகவேந்திரா மண்டப பால்கனிக்கு வந்திருந்தார்.. அங்கே வெளியில் குழுமியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்து கும்பிட்டார். ராகவேந்திரா மண்டபத்தை இத்தனை நாட்களாக பார்க்கிறவர்களுக்கு அது புதிய காட்சியாக இருந்தது.
ஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு!
அதுபோலவே இன்றும் மண்டபம் முன்பு திரண்ட ரசிகர்களை காண பால்கனிக்கு வந்தார்.. அப்போது முகத்தில் இருந்த மாஸ்க்கை கழட்டிகையில் வைத்து கொண்டார்.. பிறகு இடுப்பில் கை வைத்து கொண்டு, ஒருமுறை திரண்ட கூட்டத்தை பெருமையுடன் பார்த்தார்.. அதன்பிறகு, அனைவருக்கும் கையசைத்தார்.. பிறகு இரு கைகூப்பி வணக்கம் சொன்னார்.. அப்போதும் அந்த மாஸ்க் அவர் கையில்தான் இருந்தது.
இத்தனை நாளும், அரசியல் அறிவிப்பை ரஜினி தெரிவிக்க வேண்டும் என்று போயஸ் கார்டன் வீட்டில் தினமும் ரசிகர்கள் காத்து கிடந்தநிலையில், இன்று ரஜினியே வந்து நின்று அவர்களை பார்த்து கையாட்டி, கும்பிட்டதை கண்டு, ரசிகர்கள் கைகளை விண்ணதிர தட்டி வாழ்த்தக்களை தெரிவித்தனர்.. இந்த காட்சியைதான் இணையத்திலும் வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.