குட் நியூஸ்... தென் தமிழ்நாட்டிலுள்ள இந்த 8 மாவட்டங்களில் இன்று இடியுடன் மழை... வானிலை மையம்
சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென்தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தைக் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. இருப்பினும், கடந்த சில தினங்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாகத் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாகத் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்றும் வரும் காலங்களில் மாநிலத்தில் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.