தென்மேற்கு பருவக்காற்றால் 7 மாவட்டங்களில் மழை - ஜில் நியூஸ் சொன்ன வானிலை மையம்
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூலான தகவலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும். இந்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டும். பாபநாசம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். தென் மாவட்டத்தில் உள்ள பல அணைகளில் நீர் மட்டம் உயரும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் சரியாக தொடங்கியது என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது பல பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரத்தால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூலான தகவலை வெளியிட்டுள்ளது.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.. விமானப்படை தளபதி பதவுரியா அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஐந்து மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானாலும் மாலையில் மேகமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஜூன் 23ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்கள் 23ஆம் தேதி வரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.