ராகுல் காந்தி முதல் லதா மங்கேஷ்வர் வரை எஸ்பிபி மரணத்துக்கு இரங்கல்!!
சென்னை: ''பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குரல் பல மில்லியன் மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. அவரது குரல் வாழ்ந்து கொண்டே இருக்கும்'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். லதா மங்கேஷ்கரும் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார்.
பாடும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்! இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி! என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
''பெரும் இழப்பு இசை உலகத்திற்குLoudly crying face பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது'' என்று நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.
''திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்'' துணை முதல்வர் பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.