சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாடல்... வைரமுத்து எழுதியதை கடைசியாக பாடிய எஸ்.பி பாலசுப்ரமணியம்

கொரோனா தொற்றுக்கு ஆளாகி 50 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கடைசியாக பாடியது வைரமுத்து எழுதிய கொரோனா பாடல்தானாம்.

Google Oneindia Tamil News

சென்னை: வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அண்ணாத்தே படத்திற்காகவும் டி.இமான் இசையமைப்பில் பாடியிருக்கிறார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

Recommended Video

    மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய பாடல்.. கவிஞர் வைரமுத்து எழுதியது - வீடியோ

    கொரோனா உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள் என எழுதியுள்ளார் வைரமுத்து இந்த பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் - நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் - நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

    SP Balasubramaniam last song Corona pen by Vairamuthu

    இந்த பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். பாடலின் ஆழமான கருத்தை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கரோனா கரோனா கரோனா
    கரோனா கரோனா கரோனா

    அணுவை விடவும் சிறியது
    அணுகுண்டை போல் கொடியது
    அணுவை விடவும் சிறியது
    அணுகுண்டை போல் கொடியது

    சத்தமில்லாமல் நுழைவது
    யுத்தமில்லாமல் அழிப்பது

    கரோனா கரோனா கரோனா

    தொடுதல் வேண்டாம்,
    தனிமை கொள்வோம்
    தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
    கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
    இரண்டும் கொள்வோம்
    இதையும் வெல்வோம்

    எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
    அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
    எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
    அத்தனை போர்களிலும் அவனே வென்றான்

    கரோனாவையும் கொன்று முடிப்பான்
    கொள்ளை நோயை வென்று முடிப்பான்
    கரோனாவையும் கொன்று முடிப்பான்
    கொள்ளை நோயை வென்று முடிப்பான்

    நாளை மீள்வாய் தாயகமே
    நாளைய உலகின் நாயகமே
    கரோனாவையும் கொன்று முடிப்பான்
    கொள்ளை நோயை வென்று முடிப்பான்

    இதே போல தெலுங்கிலும் கொரோனா பற்றி எழுதப்பட்டுள்ள விழிப்புணர்பு பாடலையும் பாடியுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். இந்த பாடல்களை அழகாக ட்யூன் போட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக வெளியிட்டார் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவரையே தொட்டுப்பார்த்த கொரோனா விலகி சென்ற பின்னரும் நோயின் பாதிப்பினால் உடல் நலம் பெறாமல் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார். அவரது குரல் இசைக்கானங்கள் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    English summary
    The last song sung by SB Balasubramaniam, who succumbed to corona infection after 50 days of treatment, was the corona song written by Vairamuthu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X