ஸ்பேஸ்கிட்ஸ் இளம் விஞ்ஞானி விருது போட்டி தள்ளிவைப்பு
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள இளம் விஞ்ஞானி விருதுக்கான போட்டிகள் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அறிவியல் குறித்த அவர்களது புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும், அறிவியல் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கு அவர்களை திரட்டிக் கொண்டு வரும் வகையிலும் இளம் விஞ்ஞானி விருது 2020 என்ற விருதை சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பான போட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது சென்னையில் இது நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் திறமையை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம். 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டிகள் டிசம்பர் 4ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.
சோனியா குடும்பத்தை குறிவைத்து எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா கொண்டுவரவில்லை: அமித்ஷா
இந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக இப்போட்டிகள் டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரம் அறிய 9790748657 & 9912752744. ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.
ஆன்லைன் பதிவு செய்ய கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.