எஸ் பி பாலசுப்ரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார், சொல்வதை புரிந்து கொள்கிறார்.. மருத்துவமனை
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் உள்ளதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் படிப்படியாக அவரது உடல் நிலை தேறி வருவதாக அவ்வபபோது எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதேபோல் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணும் தனது தந்தையின் உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. எஸ்பி பாலசுப்பிரமணியம் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை!!
எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணும் தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தந்தையின் உடல் நிலைகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.