இலங்கை குண்டுவெடிப்பு: தன்னுடைய 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க்கின் மிகப்பெரிய செல்வந்தர்
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் மிகப்பெரிய பணக்காரரான ஆன்டர்ஸ் ஹால்ச் போவில்சன், இலங்கை குண்டுவெடிப்பில் தனது 3 குழந்தைகளை பறிகொடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் மிகப்பிரபலமான வீரோ மோடா மற்றும் ஜாக் அண்டு ஜோன்ஸ் பிராண்டுகளின் உரிமையாளர் போவில்சனுக்கு 4 குழந்தைகள் இருந்தனர்.
இதில் 3 குழந்தைகள் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து சுற்றி பார்த்துள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இந்த 3பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்!
இந்த தகவலை போவில்சனின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்ய மறுத்துவிட்டார். எனினும் டென்மார்க் ஊடகங்கள், போவில்சனின் 3 குழந்தைகளும் இலங்கை குண்டு வெடிப்பில் இறந்து விட்டதாக கூறிவருகின்றன.
ஸ்காட்லாந்தில் உள்ள மொத்த நிலங்களில் ஒரு சதவீதம் போவில்சனுக்கு சொந்தமானது என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்து இருந்தது.