ஈழத் தமிழர் பிரச்சனை: சீமான், திருமுருகன் காந்திக்கு இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் எதிர்ப்பு
சென்னை: ஈழத் தமிழர் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோரது கருத்துகளுக்கு பொய் பேசுவதாக இலங்கை எம்;பி. யோகேஸ்வரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இலங்கை எம்;பி. யோகேஸ்வரன் கூறியதாவது:
சீமான் போன்றவர்கள் அத்தனை பிரச்சனைகளும் முடிந்த பின்னர் பேசுகின்றனர். நீங்கள் பேசிவிட்டு சென்றுவிடுவீர்கள். எங்களுக்குத்தான் பாதிப்பு.
ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சீமான் இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார். இதுபோன்ற பேச்சுகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க திருமுருகன் காந்தி யார்? நீங்கள் தொடங்கிவைத்துவிட்டு சென்றுவிடுவீர்கள்.. பிரச்சனை எங்களைத்தான் தேடி வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு யோகேஸ்வரன் கூறினார்.