மத்த வேட்பாளர்கள் மாதிரி இருக்காதீங்க.. கவலைப்படாதீங்க.. கூடவே இருப்பேன்.. வாக்கு தந்த மகேந்திரன்
சென்னை: "மத்தவங்கள போல நீங்களும் இருந்திடாதீங்க" என்று ஸ்ரீபெரும்புதூர் மக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரனிடம் கேட்டு கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறை பலத்த போட்டி திமுகவுக்கும், பாமகவுக்கும்தான். திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலுவும், பாமக வேட்பாளராக வைத்திலிங்கமும் களமிறங்குகிறார்கள். இதனால் தொகுதியே படுசுறுசுறுப்பாக இருக்கிறது.
இவர்களுக்கு நடுவில் புயலென நுழைந்து பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஈரா. மகேந்திரன். இன்றுகூட ஆலந்தூர், ஆதம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
ஆலந்தூர் பகுதியில் ஓட்டு கேட்டு வரும்போது, அங்கிருந்த மக்கள் மகேந்திரனிடம் "ரொம்ப நாளா குடிநீர் பிரச்சனை இங்கே இருக்கு" என்றனர். அதற்கு மகேந்திரன், எல்லாம் சீக்கிரத்தில் சரி செய்துவிடலாம் என்றார். உடனே மக்கள், "நீங்களும் மத்த மற்ற வேட்பாளர்களை போல இருந்துடாதீங்க.. ஏதாவது செய்யுங்க" என்றனர்.
அதற்கு மகேந்திரன், "இங்க தண்ணி பிரச்சனைக்கு காரணம், தனியார் நிறுவனங்கள்தான். குடிக்கிற தண்ணியை விற்பனை செய்றதாலதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கவலைப்படாதீங்க.. இதை மாற்ற கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். நான் எப்பவுமே உங்க கூடவே இருப்பேன்" என்று உறுதி தந்தார்.