சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி
Recommended Video
சென்னை: சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் திரைப்படம் குறித்து ஸ்டாலினும் கேஎஸ் அழகிரியும் பேசினர்.
உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு குறித்து கே எஸ் அழகிரி வெளியிட்ட ஒரு அறிக்கை திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தர்பார் படம் பார்த்தீர்களா என ஸ்டாலின் கேட்டார். அதற்கு நான் பார்க்கவில்லை என்றேன். அவரோ நான் பார்த்துவிட்டேன். படம் நன்றாக இருக்கிறது என்றார்.
குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்.. ஒரே ஆண்டில் முடிப்போம்.. இஸ்ரோ மைய இயக்குநர்
துக்ளக்
ரஜினி மிகவும் நல்லவர். அவர் துக்ளக் விழாவில் முரசொலியையும் துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறு. ஒன்று துக்ளக் குறித்து மட்டும் அவர் பேசியிருக்கலாம்.
வாய்தவறி
இல்லாவிட்டால் முரசொலி குறித்து மட்டும் பேசியிருக்கலாம். இரண்டு குறித்தும் பேசியது தவறு. திரைப்படங்களில் வசனம் எழுதி கொடுத்து பேச சொல்வார்கள். ஆனால் இந்த விழாவில் அவர் சொந்தமாக பேசியதால் வாய் தவறி பேசியிருக்கலாம் என்றார்.
காங்கிரஸ்
சமாதானம் பேச வந்த இடத்தில் தர்பார் படம் குறித்து இரு தலைவர்களும் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஸ்டாலினின் கோபம் தணிந்துவிட்டதாகவே காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
திரைப்படம்
முரசொலி படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு முரசொலியில் தலையங்கம் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் திரைப்படம் குறித்து ஸ்டாலின் நல்ல விதமாக பேசியதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.