சட்டசபை இடைத் தேர்தல்.. 18 திமுக வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: 18 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்த்ல நடைபெறுகிறது.
மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இப்போது தேர்தல் நடத்த இயலாது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை ஸ்டாலின் அறிவித்தார். அப்போது 18 சட்டசபை வேட்பாளர்கள் குறித்த விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
அதன் படி
1. பூந்தமல்லி- கிருஷ்ணசாமி
2. பெரம்பூர்- ஆர்.டி.சேகர்
3. திருவாரூர்- பூண்டி கலைவாணன்
4. குடியாத்தம்- காத்தவராயன்
5. சாத்தூர்- சீனிவாசன்
6. பரமக்குடி- சம்பத்குமார்
7. பாப்பிரெட்டிப்பட்டி- மணி
8. ஆம்பூர்- வில்வநாதன்
9. அரூர்- கிருஷ்ணகுமார்
10. நிலக்கோட்டை- சவுந்திரபாண்டியன்
11. தஞ்சாவூர் -நீலமேகம்
12. சோளிங்கர்- அசோகன்
13. திருப்போரூர்- செந்தில்
14. விளாத்திகுளம் - ஜெயக்குமார்
15. பெரியகுளம்- சரவணக்குமார்
16. ஆண்டிப்பட்டி ஏ.மகாராஜன்
17. மானாமதுரை - இலக்கியதாசன்
18. ஓசூர்- எஸ் ஏ சத்யா
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 18 சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூச்செண்டு கொடுத்தும் காலில் விழுந்தும் ஆசி பெற்றனர்.