கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு
சென்னை: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் போது திமுக தான் ஆட்சியில் இருக்கும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா சிறப்பு பொது கூட்டம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவுரையாற்றிய ஸ்டாலின், திமுக தொண்டர்கள் அனைவருமே கலைஞரின் மகன்கள் தான். இன்னும் 4 ஆண்டுகளில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த உள்ளோம்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்கும். கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாடுவோம் என சபதம் ஏற்போம் என்றார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது சாதாரண வெற்றி இல்லை மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம்.
ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் சிலரின் சதிச்செயல் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 2 கோடியே 23 லட்சம் வாக்குகளை திமுக பெற்றதற்கு காரணம், கலைஞரின் சக்தி தான் என்றார். மதச்சார்பற்ற திமுக கூட்டணியின் வெற்றியை பார்த்து சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை என பேசினார் ஸ்டாலின்.
குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
மேலும் பேசிய ஸ்டாலின் கலைஞர் பிறந்தநாளான செம்மொழி நாளில் சொல்கிறேன், இந்தி திணிப்பில் சமரசம் கிடையாது. இந்தி திணிப்பை என்றைக்குமே எதிர்ப்போம் என்றார் இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட திமுக உறுதியாக பாடுபடும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் மற்றும் கேபிள் டிவி கட்டண விலை குறைப்பிற்காகவும் திமுக போராடும் என்றார் மேலும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்றால் திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் பிரகடனம் செய்வார். அவரோடு தோளுக்கு தோளாக நின்று களத்தில் போராட தயாராக உள்ளோம் என்றார். மேலும் பேசிய அவர் .ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் என கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய சிபிஎம் மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன், எடப்பாடி அரசும், மோடி அரசும் கொடுத்த தாக்குதல்களை முடித்து காட்டியவர் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார்.
இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன், இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதன் காரணமாகவே தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.
On 03-06-2019 21:57, Neelakandan S wrote:
> Stalin's speech to be the subject of the DMK rule during the karunanith's centenary ceremony
>
> dmk, stalin, kalaingar Karunanidhi, centenary ceremony, government, திமுக, ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, நூற்றாண்டு விழா, ஆட்சி
>
> dmk, stalin, kalaingar Karunanidhi, திமுக, ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி
>
>
> கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பிலிருந்து கொண்டாடுவோம்.. ஸ்டாலின் சூளுரை
>
> கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு
>
> சென்னை: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் போது திமுக தான் ஆட்சியில் இருக்கும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
>
> சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா சிறப்பு பொது கூட்டம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவுரையாற்றிய ஸ்டாலின், திமுக தொண்டர்கள் அனைவருமே கலைஞரின் மகன்கள் தான். இன்னும் 4 ஆண்டுகளில் கலைஞருக்கு நூற்றாண்டு விழா நடத்த உள்ளோம்.
>
> கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்கும். கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாடுவோம் என சபதம் ஏற்போம் என்றார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது சாதாரண வெற்றி இல்லை மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம்.
>
> ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் சிலரின் சதிச்செயல் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 2 கோடியே 23 லட்சம் வாக்குகளை திமுக பெற்றதற்கு காரணம், கலைஞரின் சக்தி தான் என்றார். மதச்சார்பற்ற திமுக கூட்டணியின் வெற்றியை பார்த்து சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை என பேசினார் ஸ்டாலின்.
>
> இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயன்றால் திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் பிரகடனம் செய்வார். அவரோடு தோளுக்கு தோளாக நின்று களத்தில் போராட தயாராக உள்ளோம் என்றார் மேலும் பேசிய அவர் .ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம் என்றார்