சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எப்படி போகுது... மக்கள் என்ன சொல்றாங்க... அப்பப்போ அப்டேட் செய்துகொள்ளும் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது அந்த தொகுதி நிலவரங்களை பற்றி நேரடியாக அறிந்துகொள்கிறார் ஸ்டாலின்.

விக்ரவாண்டி தேர்தல் பொறுப்புக்குழு செயலாளர் பொன்முடியையும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனையும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஸ்டாலின் வாக்குப்பதிவு எப்படி போகிறது.. மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்டு தெரிந்துகொள்கிறாராம்.

Stalin talking to vikravandi, nanguneri party executives on the phone

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டாலினிடம் இருந்து போன்கால்கள் பறந்துள்ளன. விக்ரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு சற்றும் குறையாமல் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளருக்கும் அவர் முக்கியத்துவம் தருவது காங்கிரஸ் கட்சியினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில இடங்களில் கோளாறு செய்ததையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் பொன்முடி ஸ்டாலினுக்கு பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டத்துறை நிர்வாகிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூறுங்கள் எனத் தெரிவித்தாராம். மேலும், அதிமுக தரப்பில் விதிமீறலில் ஈடுபட்டால் உடனடியாக தன்னை தொடர்புகொண்டு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 மருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம் மருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்

இதனால் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Stalin talking to vikravandi, nanguneri party executives on the phone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X