சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழிசைக்கு தாகம் வந்திருச்சு.. ஸ்டாலின் கிண்டல்!!

Google Oneindia Tamil News

சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் உடனான சந்திப்பு தமிழிசைக்கு தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.

தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று சந்தித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டு வரும் நிலையில் ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு தீவிரமாக உற்றுநோக்கப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

28 நாளில் 80 பேரணிகள்.. சித்துவுக்கு தொண்டை போச்சு.. 4 நாட்களுக்கு பேசக் கூடாதாம்! 28 நாளில் 80 பேரணிகள்.. சித்துவுக்கு தொண்டை போச்சு.. 4 நாட்களுக்கு பேசக் கூடாதாம்!

மரியாதை நிமித்தம்

மரியாதை நிமித்தம்

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு செல்ல வந்தார். கோயிலுக்கு செல்லும் வழியில் என்னை சந்திக்க வந்தார். இது ஒரு மரியாதை நிமித்தமானது தான்.

எனக்கு தெரியவில்லை

எனக்கு தெரியவில்லை

மூன்றாவது அணி அமைப்பதற்காக சந்திர சேகர் ராவ் இங்கு வரவில்லை. மூன்றாவது அணி வருமா என்பது எனக்கு தெரியவில்லை.

தேர்தல் முடிவுக்கு பின்

தேர்தல் முடிவுக்கு பின்

தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணி முடிவு வந்த பிறகுதான் 3வது அணி அமைவது குறித்து தெரியும் என்றார்.தொடர்ந்து சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து பா.ஜ.க, தலைவர் தமிழிசை , இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழிசைக்கு தாகம்

தமிழிசைக்கு தாகம்

அதற்கு பதிலளித்த ஸ்டாலின் " இந்த சந்திப்பு தமிழிசைக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த சந்திப்பு தமிழிசைக்கு தாகத்தை ஏற்படுத்தியுள்ளது " என்று நக்கலாக பதில் அளித்தார்.

English summary
Stalin teasing Tamilisai for the talk of third team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X