சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி.. அதிமுகவின் பொய் பரப்புரையை நிராகரித்த மக்கள்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஆரம்பத்திலிருந்து அதிமுக முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

Stalin thanked voters of Vellore Loksabha election 2019

இந்த நிலையில் மொத்த சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று விட்டார். அதற்கான சான்றிதழையும் அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்தார்.

கனிமொழி வந்திருந்தால் கதை மாறியிருக்கும்.. வருத்தத்தில் திமுக தொண்டர்கள் கனிமொழி வந்திருந்தால் கதை மாறியிருக்கும்.. வருத்தத்தில் திமுக தொண்டர்கள்

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி.

தாமதப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் தடுக்க முடியாது என்பது போல் உள்ளது திமுகவின் வெற்றி. திமுகவின் வெற்றிப் பயணம் மீண்டும் உறுதியாகிவிட்டது.

மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்ற அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார் ஸ்டாலின். அவர் அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

English summary
DMK President MK Stalin thanked voters of Vellore constituency for winning in Loksabha election 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X