பாரத் பந்த் வெல்லட்டும் மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் - மு க ஸ்டாலின் ட்வீட்
உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! விவசாயிகளுக்கு துணை நிற்போம் நடைபெறும் பாரத பந்த் வெல்லட்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
13 ஆவது நாளாக பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர் . பாரத பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் தேசியவாத காங்கிரஸ் ,ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய தேசிய கட்சிகளும், திமுக, காங்கிரஸ் மதிமுக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என தமிழக கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டம்... நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும்... சீமான் அறிவிப்பு..!
இன்று காலை முதல் பாரத பந்த் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது!. உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!. உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!. #StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!