புதிய பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி
சென்னை: தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு. புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1, 3, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.
இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்காக 2, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன.
முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!
இதன்படி 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.30 விலையும், 56-72 பக்கம் கொண்டு புத்தகத்துக்கு ரூ.40 விலையும், 76-92 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.50 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
96-116 பக்கம் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.60, 120-136 பக்கம் கொண்டு புத்தக விலை ரூ.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.