ஸ்டாலின் பற்றி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.. அவருக்கு நன்றி..மாஃபா பாண்டியராஜன் பேட்டி
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நன்றி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நன்றி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை.
மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார். அதனால் அடித்தார்கள்.
அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார்.
மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட வேண்டாம் என்று கூறினார். அவர் மீது நாம் கவனம் செலுத்த கூடாது என்று ஸ்டாலின் கூறினார்.
இதற்கு மாஃபா பாண்டியராஜன் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அதில், எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக நான் முதல்வரிடம் பேசி இருக்கிறேன். முதல்வரிடம் என்னுடைய பேச்சு குறித்து குறிப்பிட்டேன், என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.