சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி... புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைவரும் பயணிக்கலாம்
இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் இன்று முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ரயில் சேவை போக்குவரத்து படிப்படியாக அளிக்கப்பட்டு வந்தது.
மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில் சேவை ஏற்கனவே ஆரம்பமான நிலையில் புறநகர் ரயில் சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள்,பெண்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது, இதையடுத்து தனியார் மற்றும் ஊடகத் துறையினரும் ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது.
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா... குடியரசு தின விழாவில்... போரிஸ் ஜான்சன் பங்கேற்பதில் சிக்கல்!
இந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் இன்று முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட் மட்டுமே பெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது என்றும் கூறியுள்ளது.
கூட்ட நெரிசல் குறைவான நேரத்தில் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை அனைவரும் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.