கீதாலட்சுமி ஓய்வு.. எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தராக சுதா சேஷையன் நியமனம்
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுதா சேஷையனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் கீதாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பதவியேற்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டக் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் 2017-ஆம் ஆண்டு வருமான வரித் துறை சோதனை நடத்தினர்.
அப்போது துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமியின் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன. ஓமியோபதி மருத்துவத்தில் எம்டி முதுகலை படிப்பு மற்றும் பிஎச்டி கொண்டு வர காரணமாக இருந்தவர் கீதாலட்சுமி. இவரது பதவிக் காலம் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
இவர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஆளுநரை சந்தித்து நியமன ஆணையையும் சுதா சேஷையன் பெற்று கொண்டார். ஜெயலலிதா உடலுக்கு எம்பார்மிங் செய்த குழுவில் ஒருவராக இருந்தவர் சுதா.
தனது 30-ஆவது வயதில் அறுவை சிகிச்சை நிபுணரான சுதா சிறந்த எழுத்தாளரும் ஆவார்.