சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆழ்துளை கிணற்றில் குழந்தையை மீட்கும் கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு- வீடியோ

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

    திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தான். அவனை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.கடைசியல் சுஜித்தின் உடலை சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு அவன் விழுந்த ஆழ்துளை குழாய் வழியாகவே மீட்டனர்.

    bore well

    பின்னர் பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைத்தனர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் சுஜித் உடல் நாடுக்காட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    குழந்தை சுஜித்தின் மரணம் தமிழக மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது.

    இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

    சுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தைசுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை

    மேலும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில். ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    sujith died : 5 Lakh reward announced tn govt for who creating a child restoration tool in a deep well
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X