தி.நகரில் ஷாப்பிங் செய்தாரே சுஷ்மா.. மறக்க முடியுமா.. பாஜக பெண் நிர்வாகி வேதனை
சென்னை: மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை வந்த போது தி நகரில் உள்ள பொருள்களை விரும்பி வாங்கி மகிழ்ந்தார் என பாஜக பெண் நிர்வாகி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன் தினம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றவர். தனக்கு கொடுத்த இலாகாவில் பணிகளை செவ்வனே செய்து முடித்தவர். உதவி என யார் கேட்டாலும் அவர்களுக்கு சளைக்காமல் உதவக் கூடியவர்.
நன்கு பழகுபவர்
இவரது இழப்பு பாஜகவினருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இழப்பாகும். கட்சி பேதமின்றி அனைவருடனும் நன்கு பழகக் கூடியவர்.
சில பொருட்கள்
சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்தார். அப்போது தமிழக பாஜகவின் துணை தலைவராக இருந்த லலிதா சுபாஷிடம் அன்பாக பழகினார். அவருடன் சேர்ந்து சில பொருட்களை வாங்க திநகர் சென்றார்.
எளிமை
இதுகுறித்து லலிதா கூறுகையில் சுஷ்மாவின் எளிமையும் பழகும் பண்பும் என்றும் மறக்க முடியாதவை. அவர் சென்னை வந்த போது திநகர் பாண்டி பஜாரில் பொருட்களை வாங்க விரும்பினார். அங்கே வெளியே விற்ற உணவு முதல் துணிகள் வரை அத்தனையையும் வாங்கினார்.
சுத்தமான உடை
பின்னர் சென்னை கடற்கரைக்கு சென்றோம். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் சென்றோம். மல்லிகைப்பூ வைத்துக் கொள்வதை சுஷ்மா மிகவும் விரும்புவார். எப்போதும் சுத்தமான உடை அணிவதில் கவனம் செலுத்துவார் என்றார்.