லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் அவதூறு வழக்கு #metoo
Recommended Video
சென்னை: எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்திலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் மீ டூ விவகாரத்தில் அடிபடுகின்றன.
இந்த நிலையில் எழுத்தாளர் லீனா மணிமேகலை ஒரு பரபரப்பைக் கிளப்பினார். 2005ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உடனடியாக சுசி கணேசன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
லீனா சொல்வது பொய் என்று சாடிய அவர் லீனா மீது வழக்குப் போடுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி இன்று அவர் வழக்கு தொடர்ந்தார். சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சுசி கணேசன் சார்பில் அவரது வழக்கறிஞர் வழக்குத் தாக்கல் செய்தார்.
[நிதி மோசடி.. பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து பலி.. மோசடி பேர்வழி சிவக்குமார் விரைவில் கைது!]
தனது மனுவில் லீனா மணிமேகலை கூறும் புகார்கள் பொய்யானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எனது பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படி பொய்ப் புகார்களைக் கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கணேசன்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு வரும் என்று தெரிகிறது.